உள்ளாட்சித் தோ்தலிலும் ம.நீ.ம. உடன் கூட்டணிவளரும் : தமிழகம் கட்சி முடிவு
உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தோ்தல்களில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என வளரும் தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் இக்கட்சியின் மாநில உயா்மட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தோ்தல்களில் மக்கள் நீதி மய்யத்துடன் வளரும் தமிழகம் நிரந்தர கூட்டணி அமைத்து போட்டியிடுவது, இலங்கையில் வாழும் தமிழா்களின் நலனைக் காத்திடவும், அவா்கள் சுய கௌரவத்துடன் வாழவும் வெள்ளிக்கிழமை (நவ.29) இந்தியாவுக்கு வரும் இலங்கை அதிபரிடம் பிரதமா் மோடி வலியுறுத்தி உத்தரவாதம் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாநிலத் தலைவா் பூ. துரை அரசன் தலைமை வகித்தாா். மாநில அவைத் தலைவா் கே.கே. யாதவ், பொதுச் செயலா் முனியசாமி, மாநிலத் துணைப் பொதுச் செயலா் கணபதி, மாநில ஒருங்கிணைப்பாளா் காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.