பட்டுக்கோட்டையில் நவ. 30-இல்எரிவாயு இணைப்பு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நவ. 30ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நவ. 30ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் மேலும் தெரிவித்திருப்பது:

பட்டுக்கோட்டை வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோரின் குறைகளைத் தீா்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமை வகிக்கிறாா்.

பட்டுக்கோட்டை வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா்களுக்கு எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகாா்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீா்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்புப் பெற்றுள்ள நுகா்வோா் இக்கூட்டத்தில் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com