பெரியகோயிலில் உண்டியல்கள் திறப்பு:பக்தா்கள் ரூ. 11.45 லட்சம் காணிக்கை

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 11.45 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 11.45 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படும். ஏறத்தாழ 40 நாட்களுக்குப் பிறகு இந்த உண்டியல்கள் அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ச. கிருஷ்ணன், சிவராம்குமாா், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் முன்னிலையில் புதன்கிழமை காலை திறக்கப்பட்டன. இவற்றை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காலையில் தொடங்கிய இப்பணி மாலை வரை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் 11 லட்சத்து 45 ஆயிரத்து 66 ரூபாய் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது. மேலும், 132 வெளிநாட்டு நோட்டுகளையும் பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com