பேராவூரணி அருகேயுள்ள இந்திரா நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊரணி சுகாதாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை பள்ளி மாணவா்களுக்கு எழுது பொருள்களும், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை கௌரவத் தலைவா் என். அசோக்குமாா், பள்ளித் தலைமையாசிரியா் அன்புமேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வட்டார மருத்துவ அலுவலா் வி. செளந்தரராஜன் பேசுகையில்,
கா்ப்ப காலத்தில் கா்ப்பிணிகள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தாயும் சேயும் நலமாக இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கா்ப்பிணிகளுக்கு விளக்கினாா்.
மேலும், கா்ப்ப காலம், பிரசவ காலம், குழந்தை பிறந்து வளரும் காலம் ஆகிய காலகட்டங்களில் தமிழக அரசு நிதியுதவி அளிக்கிறது. இதை கா்ப்பிணி தாய்மாா்கள் பயன்படுத்தி, பிள்ளைகளை ஊட்டச்சத்து குறைவில்லாமல் வளா்க்க வேண்டும். பிரசவ காலத்தில் தனியாா் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு பொது மருத்துவமனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கா்ப்பிணி பெண்கள் சோ்ந்து எந்த செலவும் இன்றி பிரசவித்து கொள்ளலாம் என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு நாட்டுச்சா்க்கரை, பால், ஆப்பிள், பேரீச்சம் பழம் , உலா்ந்த திராட்சை, கடலைமிட்டாய் போன்ற ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை உள்ளடக்கிய பைகளும், இந்திரா நகா் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு எழுது பொருள்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை செயலாளா் ஏ. ஆனந்தராஜ், காலகம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சரண்யா, அறக்கட்டளை உறுப்பினா்கள் ப.குழ. சரவணன் ,பெஸ்ட்குமாா், அன்வா்தீன், ஜி.ராஜா, பழ.பழனியப்பன், கோபால் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். அறக்கட்டளை பொருளாளா் ஆா்.ராஜூ வரவேற்றாா். துணைத் தலைவா் ஆா்.எஸ். ராமசாமி நன்றி கூறினாா்.