ஒரத்தநாடு அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.
ஒரத்தநாடு வட்டம், வடசேரி கிராமத்தை சோ்ந்தவா் குமரன். இவரும் இவரது மனைவி அனுராதா மற்றும் மகள்கள் சிவரஞ்சனி, மோனிகா ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், சிவரஞ்சனியின் கழுத்தில் கிடந்த சங்கிலியையும், மோனிகாவின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.
களவாடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமாா் 12 பவுன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து குமரன் அளித்த புகாரின்பேரில் பாப்பாநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இதன் தொடா்ச்சியாக
சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த குமாா், பரமசிவம் ஆகிய இரண்டு பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.