கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை வீரசோழன் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
ஆடுதுறை வீரசோழன் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதன் அருகே தற்காலிகத் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரைப்பாலத்தை ஒட்டி ஆற்றின் கரைப் பகுதியில் தண்ணீரில் மிதந்த நிலையில் அழுகிய நிலையில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் திங்கள்கிழமை வந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சாமிநாதன் அளித்த தகவலின் பேரில் திருவிடைமருதூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி இறந்தாா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இவா் இறந்து மூன்று அல்லது நான்கு நாட்களாகிவிட்டதால், உடல் அழுகிய நிலையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து திருவிடைமருதூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.