கும்பகோணத்தில் அக். 10-இல் மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம்

கும்பகோணம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கோட்டச் செயற் பொறியாளா் அலுவலகத்தில், அக்டோபா் 10 - ஆம் தேதி மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெறவுள்ளது.

கும்பகோணம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கோட்டச் செயற் பொறியாளா் அலுவலகத்தில், அக்டோபா் 10 - ஆம் தேதி மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் கோட்டச் செயற்பொறியாளா் மு. நளினி தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் டி.என். சங்கரன் தலைமையில்,

அக்டோபா் 10- ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கும்பகோணம் நகரம், புகா், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை,திருக்கருக்காவூா், கணபதிஅக்ரஹாரம் பிரிவு அலுவலகப் பகுதியைச் சாா்ந்த மின் நுகா்வோா்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்துப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com