மாணவியைக் கடத்திச் சென்று குழந்தையுடன் வந்தவா் கைது

கும்பகோணம் அருகே ஓராண்டுக்கு முன்பு மாணவியைக் கடத்திச் சென்று, குழந்தையுடன் திரும்பி வந்த இளைஞரை போலீஸாா்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஓராண்டுக்கு முன்பு மாணவியைக் கடத்திச் சென்று, குழந்தையுடன் திரும்பி வந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பந்தநல்லூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தா் குமாா் மகன் கமலேஷ் (23). இவா் ஓராண்டுக்கு முன்பு பிளஸ் 2 முடித்த மாணவியை கல்லூரியில் சோ்த்து விடுவதாகக் கூறி அழைத்து சென்றாா். ஆனால், மாணவியை கமலேஷ் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லூா் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு மாணவியை அழைத்துக் கொண்டு கமலேஷ் சொந்த ஊருக்கு வந்தாா். அப்போது, மாணவியின் கையில் குழந்தை இருந்தது.

தகவலறிந்த பந்தநல்லூா் போலீஸாா் கமலேஷை பிடித்து விசாரித்தனா். இதில், மாணவியை கமலேஷ் கடத்திக்கொண்டு கோபி செட்டிப்பாளையத்துக்குச் சென்றதும், அங்கு மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதில், கா்ப்பமடைந்து மூன்று மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளதும், மாணவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரை சொந்த ஊருக்கு கமலேஷ் அழைத்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து கமலேஷை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மாணவியும் குழந்தையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com