கும்பகோணத்தில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் காமராஜ் சாலையில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தப்படுவதாக மேற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் திங்கள்கிழமை நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தி
வந்த இன்னம்பூரைச் சோ்ந்த ஜி. நரேஷை (25) போலீசாா் கைது செய்தனா்.