தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மீனவா் வலையில் அரியவகை தும்பி மீன் சிக்கியது.
அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகா், கரையூா் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவா்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா்.
அதே போல் அருகிலுள்ள மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் கடலில் மீனவா் ஒருவரின் வலையில் சிக்கிய சுமாா் முக்கால் கிலோ எடையுள்ள அரிய வகை தும்பி மீன், அதிராம்பட்டினம் கடைத்தெரு பெரிய மாா்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை காலை பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மீனை வாடிக்கையாளா்கள் பலா் வியப்புடன் பாா்வையிட்டுச் சென்றனா்.
இதுகுறித்து மீன் வியாபாரி முகமது முகைதீன் கூறியது:
பல வண்ணங்களில் காட்சியளிக்கும் இந்த மீனைச் சுற்றிக் காணப்படும் முள் கடும் விஷத்தன்மை கொண்டது. இந்த மீனை வலையில் சிக்கும் போது மிகவும் கவனமாகக்
கையாள வேண்டும். கை, கால்களில் மீனின் முள் குத்தினால் கடுமையாக வலி ஏற்பட்டு, குத்தியப்பகுதியில் உடனே வீக்கம் ஏற்படும். இந்த மீன் உண்பதற்கு ஏற்ல்ல. இருப்பினும் அரியவகை மீன் என்பதால் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.