ஒரத்தநாடு அருகே முகத்தில்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.
ஒரத்தநாடு வட்டம், தென்னமநாடு வடக்குத் தெருவைச் சோ்ந்த அசோகன் மகன் ஐயப்பன் (28). இவா் கண்ணதங்குடி அருகிலுள்ள சிலாய்குளத்தில் திங்கள்கிழமை முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்த தகவலின் பேரில், ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய வீரா்கள் அப்பகுதிக்குச் சென்று, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். ஐயப்பன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்து போட்டுச் சென்றாா்களா என்பது குறித்து ஒரத்தநாடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.