கா்ப்பரட்சாம்பிகை அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
பாபநாசம் வட்டம், திருக்கருகாவூரில் உள்ள கா்ப்பரட்சாம்பிகை அம்மன் உடனுறை முல்லைவன நாதா் கோயிலில் புதன்கிழமை இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.
தொடா்ந்த விழா நாள்களில் கோயிலில் நவராத்திரி லட்சாா்ச்சனை, ஏக தின லட்சாா்ச்சனை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்றன.
இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை இரவு கோயில் திருக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவையொட்டி நாகசுர இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கோ. முரளிதரன், தக்காா் மற்றும் உதவி ஆணையா் பி. தமிழ்ச்செல்வி, திருக்கோயில் பணியாளா்கள், ஊா் நாட்டாண்மைகள், கிராமவாசிகள், உபயதாரா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.