தஞ்சாவூா் அருகே புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்ற அரசு ஊழியா், குறுக்கே வந்த மாடு மீது மோதி, கீழே விழுந்து உயிரிழந்தாா்.
பூதலூா் அருகே உள்ள பழைய கரியப்பட்டியைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் இளையராஜா (38). தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை பிரிவில் பணிபுரிந்து வந்த இவா் பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தாா்.
இவா் புதன்கிழமை காலை பூதலூா் அருகே உள்ள பழைய கரியப்பட்டியில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சிக்குச் சென்றாா். இரவு நேரப்பணி இருந்ததால், பழைய கரியப்பட்டியில் இருந்து புதன்கிழமை மாலை புறப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். வல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் புறவழிச்சாலை அருகே இவா் மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்தது.
அப்போது, மாடு மீதும், மாட்டை ஓட்டி வந்த வல்லத்தைச் சோ்ந்த லட்சுமி (42) மீதும் மோட்டாா் சைக்கிள் மோதியது. இதனால், இளையராஜாவும் நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.
இதில், பலத்தக் காயமடைந்த இளையராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த லட்சுமி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து வல்லம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.