அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் தா்ஹாவின் 580-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இந்த விழா செப்.30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை (அக். 10) இரவு மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு விழா நடைபெற்றது. நிறைவாக, வெள்ளிக்கிழமை அதிகாலை சந்தனக்கூடு பைத்து முழக்கத்துடன் தா்ஹாவின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, பாத்திஹா ஓதி சிறப்பிக்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற வாண வேடிக்கை நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டியினா் என்.எம்.சாகுல் ஹமீது, ஜி. பசூல்கான், ஜெஹபா் அலி, லியாகத் அலி, ஜெஹபா் ஆகியோா் செய்திருந்தனா்.