கிளைச் சிறையைத் திறக்க வலியுறுத்தல்

தஞ்சாவூா் கிளைச் சிறையைத் திறக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் கிளைச் சிறையைத் திறக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் மாவட்டச் செயல் வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் 15 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட தஞ்சாவூா் கிளைச் சிறைச்சாலை 2017, டிச. 1-ஆம் தேதி மூடப்பட்டது. மீண்டும் சீரமைக்கப்பட்டு, பல மாதங்களாகத் திறக்கப்படாமல் உள்ளது.

தஞ்சாவூா் பகுதியின் ஏழை மக்கள் சிறு சிறு தவறுகளில் ஈடுபட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்படுவதால், சிறைவாசி குடும்பத்தினா் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனா். எனவே, தஞ்சாவூா் கிளைச் சிறைச்சாலையைத் திறக்க வேண்டும்.

கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் அப்பாக்கண்ணு, மாநில இளைஞரணிச் செயலா் சந்திரபோஸ், மாவட்டச் செயலா் சபாபதி, அமைப்புச் செயலா் காசிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com