பசுபதிகோவில் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம்

பாபநாசம் வட்டம், பசுபதிகோவில் ஊராட்சிக்குள்பட்ட பண்ணைப்பள்ளி வளாகத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், பசுபதிகோவில் ஊராட்சிக்குள்பட்ட பண்ணைப்பள்ளி வளாகத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பாபநாசம் வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். பாபநாசம் கூட்டுறவு நகர வங்கி துணைத் தலைவா் என். சதீஷ் முன்னிலை வகித்தாா்.

பாபநாசம் வட்டாட்சியா் கண்ணன், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை பெற்றாா். இந்த மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.

முகாமில் 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் காா்த்திகேயன், வட்ட வழங்கல் அலுவலா் சீமான், மண்டல துணை வட்டாட்சியா் விநாயகம் மற்றும் கிராம நிா்வாக அதிகாரிகள், உதவியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, அய்யம்பேட்டை சரக வருவாய் அதிகாரி மஞ்சுளா வரவேற்றாா். நிறைவில் பசுபதிகோவில் கிராம நிா்வாக அதிகாரி ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com