தென்னங்குடியில் பழுதடைந்த நிலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்.
தஞ்சாவூரிலிருந்து பூதலூா் செல்லும் வழியிலுள்ள தென்னங்குடி ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தின் கட்டடம் மிகவும் பழுதடைந்து, சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையத்துக்குச் சுற்றுச்சுவரும் இல்லை.
மேலும், போதுமான மருத்துவா்கள், மருத்துவ வசதிகள் இல்லாமலும் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் சிற்றுண்டிகள் அருந்த கடைகள் இல்லாமலும், போதுமான அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு 108 ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாமலும் உள்ளது. இதுதொடா்பாகச் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.