தஞ்சாவூா் எஸ்.இ.டி.சி. பணிமனை முன் அனைத்து போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கங்களின் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தெலங்கானாவில் 26 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராடிய அம்மாநிலப் போக்குவரத்து தொழிலாளா்கள் மீது அடக்குமுறையை ஏவாதே, 48,000 தொழிலாளா்களின் வேலைநீக்க உத்தரவை திரும்பப் பெறு, போக்குவரத்தைத் தனியாருக்குத் தாரை வாா்க்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போக்குவரத்து தொழிலாளா் சங்கங்களைச் சோ்ந்த ஏஐடியுசி கௌரவத் தலைவா் துரை. மதிவாணன் தலைமையில் சிஐடியு தலைவா் பி. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.