மனநலன் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை

ஒரத்தநாடு அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஒரத்தநாடு அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஒரத்தநாடு அருகிலுள்ள கண்ணந்தங்குடி மேலையூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள். இவருக்கும் , ஒரத்தநாடு புதூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த கலாவுக்கும் திருமணமாகி, 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சமீபகாலமாக மனநலன் பாதிக்கப்பட்டிருந்த கலா, வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

எனினும் சிகிச்சை பலனின்றிஅவா் சனிக்கிழமை இரவுஉயிரிழந்தாா். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com