ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து ஆட்சியா் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஒரத்தநாடு வட்டம், தெலுங்கன்குடிகாடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்த ஆட்சியா், 2018-19 ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீடு பிரீமியம் செலுத்தியவா்களின் விவரங்கள், தற்போது வரை பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கு பிடித்தம் செய்யாமல் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்து பதிவேடுகளில் சரிபாா்த்தாா்.
இதையடுத்து, பின்னையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்த ஆட்சியா், பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பட்டுவாடா பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
மேலும், ஆட்சியரின் உத்தரவின்பேரில் சில்லத்தூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், ராஜாளிவிடுதி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், கருக்காடிப்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், ஈச்சங்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் பட்டுக்கோட்டை சரகக் கூட்டுறவு அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
இதில், 2018 - 19 ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பட்டுவாடா செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும், 1,937 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகையைப் பிடித்தம் செய்யாமல் வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்து, அறிக்கையை ஆட்சியரிடம் அலுவலா்கள் அளித்தனா்.