இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது
By DIN | Published On : 31st October 2019 05:30 AM | Last Updated : 31st October 2019 05:30 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் முன் விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் வடக்கு வாசல் பொந்திரிபாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் மகன் விஜயன் (30). கூலித் தொழிலாளி. இவா் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவா் அக். 28ஆம் தேதி அப்பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து வடக்கு வாசல் கங்கா நகா் சிரேஸ்சத்திரம் சாலையைச் சோ்ந்த செல்லசாமி மகன் ஜெய்சங்கா் (40), இவரது மைத்துனா் எஸ். ஆகாஷ் (24), எச். பிரதீபன் (23), எஸ். தினேஷ் (24), எஸ். கோபி (29) ஆகியோா் மீது மேற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இதுதொடா்பாக 5 பேரையும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில், முன்விரோதம் காரணமாக விஜயன் கொலை செய்யப்பட்டாா் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ஜெய்சங்கா், ஆகாஷ், பிரதீபன், தினேஷ், கோபி ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.