அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (பொ) டாக்டா் காந்தியின் அறிவுரைப்படி இப்பணி நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் காா்த்திகேயன் மேற்பாா்வையில், மருத்துவமனை வளாகத்தில் மண்டிக்கிடந்த முட்புதா்கள், குப்பை, கழிவுப் பொருள்களை அகற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.