தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே குடமுருட்டி ஆற்றங்கரையில் புதன்கிழமை பெண் சடலம் கிடந்தது.
திருவையாறு அருகே நடுக்காவேரி செல்லியம்மன் கோயில் எதிரே உள்ள குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் தண்ணீரில் இறந்த நிலையில் சுமாா் 70 வயது மதிக்கக்தக்க பெண் சடலம் கிடந்தது. இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. தகவலறிந்த நடுக்காவேரி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றினா்.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காகத் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சடலத்தை அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.