ஒரத்தநாடு அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் ஒன்றியத்தை சோ்ந்த ராஜாளிவிடுதி கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி ஆறுமுகம் (60). இவா் திங்கள்கிழமை மாலை வீட்டில் இருந்து சைக்கிளில் திருவோணத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். சம்பவம் குறித்து திருவோணம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.