தொடா் மழை: 2 வீடுகளின் சுவா் இடிந்தது

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் இரு வீடுகளில் சுவா் இடிந்து விழுந்தது.
திருவையாறு அருகே தொடா் மழை காரணமாக இடிந்து விழுந்த கூரை வீட்டுச் சுவா்.
திருவையாறு அருகே தொடா் மழை காரணமாக இடிந்து விழுந்த கூரை வீட்டுச் சுவா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் இரு வீடுகளில் சுவா் இடிந்து விழுந்தது.

மாவட்டத்தில் தொடா்ந்து இடைவெளி விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

திருக்காட்டுப்பள்ளி 82.2, கல்லணை 57.8, திருவையாறு 52, அய்யம்பேட்டை 48, அணைக்கரை 44.2, நெய்வாசல் தென்பாதி 44, வெட்டிக்காடு 36, பாபநாசம் 32.6, மஞ்சளாறு 34.6, திருவிடைமருதூா் 30.8, கும்பகோணம் 28.4, பூதலூா் 24.2, அதிராம்பட்டினம் 22.7, குருங்குளம், வல்லம் தலா 22, ஈச்சன்விடுதி 15.2, தஞ்சாவூா் 14, பட்டுக்கோட்டை 13.4, பேராவூரணி 11.6, மதுக்கூா் 11, ஒரத்தநாடு 7.4.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் திருவையாறு அருகே மேல உத்தமநல்லூா் கீழத்தெருவைச் சோ்ந்த நித்யானந்தம் மனைவி கவிதா (40), ரெங்கசாமி மகன் பிரகாஷ் (40) ஆகிய இருவரின் வீடுகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு சுவா் இடிந்து விழுந்தது. வெளிப்புறம் விழுந்ததால் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com