பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில்நிலவேம்பு குடிநீா் வழங்கல்

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு, பாபநாசம் அரசு மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாமை புதன்கிழமை நடத்தின.

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு, பாபநாசம் அரசு மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாமை புதன்கிழமை நடத்தின.

முகாமை பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான சி. சிவகுமாா் தலைமை வகித்து தொடக்கி வைத்து பொதுமக்கள், வழக்குரைஞா்கள், வழக்காடிகள், நீதிமன்ற அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பருவகால நோய்கள் குறித்தும், பாபநாசம் வட்ட சட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில் வழக்குரைஞா்கள், பொதுமக்கள், நீதிமன்ற அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீரை அருந்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் பாலசுப்ரமணியன், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வ சட்டப் பணியாளா்கள் தனசேகரன், சந்தானம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com