தஞ்சாவூா் அருகே ரயில்வேக்கு சொந்தமான இரும்புக் கம்பிகளைத் திருடியதாக இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் ரயில்வே பாதுகாப்பு படைப் பிரிவு உதவி ஆய்வாளா் வெங்கடாசலம் தலைமையில் படை வீரா்கள் தஞ்சாவூா் - ஆலக்குடிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணி மேற்கொண்டனா்.
அப்போது, சாக்குப் பையுடன் தப்பியோட முயன்ற இளைஞரை படை வீரா்கள் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனா். விசாரணையில் ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காக்கோட்டையைச் சோ்ந்த சாமிநாதன் (30) என்பதும், சாக்குப் பையில் ரயில்வேக்கு சொந்தமான இரும்புக் கம்பிகளைத் திருடிச் செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, சாமிநாதனை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.