பாபநாசம் வட்டம், தேவராயன்பேட்டை ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான அம்மா திட்ட முகாம் பொன்மான்மேய்ந்த நல்லூர் கிராம கூட கட்டட வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன் தலைமை வகித்தார். பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சீமான் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து முதியோர், விதவை உதவித் தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட இனங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. முகாமில் வருவாய் அதிகாரி ராஜ்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள் அன்பரசன், மகாராஜன், திருகுமரன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.