அதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிகழ்ச்சி நிறைவு

அதிராம்பட்டினத்தில் கடந்த 83 ஆண்டுகளாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் என்ற 40 நாள் நிகழ்ச்சி, வழக்கம்  போல் நிகழாண்டும் அதிரை ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் ஆக.2-ம் தேதி  தொடங்கி, 40-வது நாளான


அதிராம்பட்டினத்தில் கடந்த 83 ஆண்டுகளாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் என்ற 40 நாள் நிகழ்ச்சி, வழக்கம்  போல் நிகழாண்டும் அதிரை ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் ஆக.2-ம் தேதி  தொடங்கி, 40-வது நாளான சனிக்கிழமை (செப்.14) காலை நிறைவடைந்தது.
அதிராம்பட்டினம் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி. முகமது குட்டி தலைமையில், தொடர்ந்து 40 நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு, துஆ, திக்ரூ நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச்  சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் பலர்  பங்கேற்றனர். தினமும் மஜ்லீஸ் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நிறைவு நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி. முகமது குட்டி தலைமை வகித்து, இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்த்தினார். நிறைவாக, சிறப்பு துஆ ஓதப்பட்டது. பெண்கள் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக, சனிக்கிழமை அதிகாலை சுபுஹு தொழுகைக்குப் பின் திக்ரூ மஜ்லீஸ் நடைபெற்றது. இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தொழுகையாளிகள் பலர் பங்கேற்று திக்ரூ செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com