தஞ்சாவூரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தஞ்சாவூரில் மாநகரிலுள்ள 51 வார்டுகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 


தஞ்சாவூர்:  திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தஞ்சாவூரில் மாநகரிலுள்ள 51 வார்டுகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள கூட்டுறவு காலனியில் இளைஞர்களுக்கு திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலர் பைந்தமிழ் பாரி விண்ணப்பப் படிவத்தை வழங்கி, முகாமைத் தொடக்கி வைத்தார். 
முகாமுக்கு திமுகவின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாநகரச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம்,  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண். ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக இளைஞரணியின் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com