கல்லணை கால்வாயில் மூழ்கிய காவலாளி உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே திங்கள்கிழமை மாலை ஆற்றில் குளிக்கச் சென்ற காவலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அருகே திங்கள்கிழமை மாலை ஆற்றில் குளிக்கச் சென்ற காவலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்ப்பட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கலைச்செல்வன் (30). திருமணமாகாதவர். இவர்  பிள்ளையார்ப்பட்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கயிறு வாரியத்தில்  தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தக் காவலாளியாக வேலை செய்து வந்தார்.  
இவர் திங்கள்கிழமை மாலை  வண்ணாரப்பேட்டை பழைய பாலம் அருகே கல்லணைக் கால்வாயில் (புது ஆற்றில்) குளிப்பதற்காகச் சென்றார். அப்போது தண்ணீர்  மூழ்கிய இவர் உயிரிழந்தார்.
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று ஆற்றில் மிதந்து கொண்டிருந்த கலைச் செல்வன் சடலத்தை மீட்டனர். இது
குறித்து வல்லம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com