பாபநாசம் அருகே இளம்பெண்ணை தாக்கியவர் கைது

பாபநாசம் அருகே இளம்பெண்ணை தாக்கியவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். 

பாபநாசம் அருகே இளம்பெண்ணை தாக்கியவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். 
பாபநாசம் அருகே ஓலைப்பூஞ்சேரி கிராமம், கீழத் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (39). அகரமாங்குடி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் சங்கர் (34). இவர்கள் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், அண்மையில் சங்கர், பன்னீர்செல்வத்தின் வீட்டின் முன் நின்று கொண்டு தகராறு செய்து, பன்னீர்செல்வத்தின் 19 வயது மகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com