பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் மாவட்ட ஜங்கம் சமூக நலச்சங்க பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் பி.சுந்தரம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் சேவை தொடங்க வேண்டும். இதற்குத் தேவையான கேட்கீப்பர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். பட்டுக்கோட்டை தட்டான்குளம் மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க நிர்வாகிகள் ஜி. முருகையன், என்.ஆர். வேணுகோபால், வி.சிவலிங்கம் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவில், ஜி.தர்மராஜ் நன்றி கூறினார்.