தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாட்சியரகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் புதன்கிழமை (செப்.25) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்தது:
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார். எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோருக்கு எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் தாமதம், அரசு மானியம், வங்கிக் கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிகளுக்குள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடக்கிறது. எனவே, எரிவாயு நுகர்வோர் இக்கூட்டத்தில் பங்கேற்று மனுக்கள் மூலமும், நேரிலும் குறை தெரிவிக்கலாம்