பாபநாசம் அருகே கபிஸ்தலம் அரசு சுற்றுலா மாளிகையில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகியவர்கள் அமைச்சர் இரா. துரைக்கண்ணு முன்னிலையில் சனிக்கிழமை அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கும்பகோணம் வடக்கு ஒன்றிய அமமுக செயலர் சாமிநாதன், இணைச் செயலர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பிரதிநிதி ஜி. சரண்ராஜ், விவசாய அணி ஒன்றிய இணை செயலர் எஸ். பாலன்,அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலர் வி. ஜவஹர்,ஒன்றிய மாணவரணி செயலர்ஆர். விஜயேந்திரன்,பெருமாண்டி கிளைச் செயலர் ஆர். அமுல்ராஜ் உள்ளிட்டோர் வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு அமைச்சர் இரா. துரைக்கண்ணு சால்வை அணிவித்து வாழ்த்தினார். கபிஸ்தலம் அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபநாசம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கே. கோபிநாதன்,கும்பகோணம் ஒன்றியச் செயலர் வழக்குரைஞர் சோழபுரம் அறிவழகன்,திருவிடைமருதூர் ஒன்றிய செயலர் அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏ ராம. ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.