தஞ்சாவூர்
அமைச்சரைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் ரயிலடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் ரயிலடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய செயலர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை களங்கப்படுத்தும் விதமாகத் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பிற்பட்டோர் துறை மாநில துணைத் தலைவர் வி.ஆர். குணசேகரன் தலைமை வகித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கே. மகேந்திரன், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், நிர்வாகிகள் கோவி. மோகன், எஸ். குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.