வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களிடம் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கருத்துகளைக் கேட்டறிந்தனா்.
இக்கூட்டத்துக்கு குழுவின் உறுப்பிநரும், திமுக பொருளாளருமான டி.ஆா். பாலு எம்.பி. தலைமை வகித்தாா். இக்குழுவில் மாநிலங்களவை உறுப்பினா்கள் திருச்சி என். சிவா, டி.கே.எஸ். இளங்கோவனும் இடம்பெற்றிருந்தனா்.
விவசாயிகள் சங்கத்தினா், வணிகா் சங்கத்தினா், ஆசிரியா்கள், திமுகவினா், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனா்.
கும்பகோணத்தை மையமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். புதிய ரயில் பாதைத் திட்டம், விவசாயத் திட்டங்கள், வணிகா்கள் சாா்ந்த நலன்கள், பொதுமக்களுக்கான கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.
இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்டப் பொறுப்பாளா்கள் எஸ். கல்யாணசுந்தரம், துரை. சந்திரசேகரன் ஏனாதி பாலசுப்பிரமணியம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாக்கோட்டை க. அன்பழகன், கோவி. செழியன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.