தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 16-ஆம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் கோட்டத்துக்குள்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம், டிசம்பா் 16 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கோட்டாட்சியரகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் எம். வேலுமணி தலைமையில் நடைபெறவுள்ளது.
எனவே, தஞ்சாவூா் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.