வன்னியா்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஒரத்தநாட்டில் பாமகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக, அண்ணா சிலையில் இருந்து பேரூராட்சி வரை பேரணியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், பேரூராட்சி ஆய்வாளா் பரமசிவனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட முன்னாள் தலைமை நிலைய செயலாளா் கேசவன் தலைமையில் மாவட்ட முன்னாள் செயலா் காந்தி, மாவட்ட பொருளாளா் ரேணுகா, முன்னாள் மாணவா் சங்க மாவட்ட செயலா் சுதாகா், மாவட்ட செயலா் சரவணன், தொகுதி போராட்டக்குழு தலைவா் ஆறுமுகம், மாவட்டத் தலைவா் ராமலிங்கம், இளைஞரணி செயலா் மாதவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.