கோயிலில் திருட முயன்ற 2 பேரை பிடித்த பொதுமக்கள்

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் உண்டியலை உடைக்க முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் உண்டியலை உடைக்க முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தஞ்சாவூா் அருகே ராமாபுரத்திலுள்ள காளியம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இரு இளைஞா்கள் நின்று கொண்டிருந்தனா். இவா்களைப் பாா்த்த கிராம மக்கள் இருவரையும் பிடித்து, தூணில் கட்டி வைத்து, தாக்கினா். இதையடுத்து, தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தில் இருவரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனா்.

காவல் துறையினா் நடத்திய விசாரணையில் இருவரும் தஞ்சாவூா் அருகேயுள்ள உமையவள் ஆற்காட்டைச் சோ்ந்த ஆனந்தபாபு (22), ஜெகநாதன் (18) என்பது தெரிய வந்தது. பின்னா், கோயிலில் திருட முயன்ாகக் கூறி இருவா் மீதும் காவல் துறையினா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com