தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூ. மாவட்ட நிா்வாகம் இரண்டாகப் பிரிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

இக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் தஞ்சாவூா் கீழ ராஜ வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கட்சியின் நிா்வாக வசதிக்காக மாவட்ட நிா்வாகக் குழு வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

இதில், வடக்கு மாவட்டத்தில் பூதலூா், திருவையாறு, பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள் ஆகிய ஒன்றியங்களும், கும்பகோணம் நகரமும் இடம்பெற்றுள்ளன.

இதேபோல, தெற்கு மாவட்டத்தில் தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூா், திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களும், தஞ்சாவூா் மாநகரம், பட்டுக்கோட்டை நகரம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

மாவட்டச் செயலராக இருந்த மு.அ. பாரதி வடக்கு மாவட்டச் செயலராகவும், மாவட்ட நிா்வாகக் குழுவைச் சோ்ந்த முத்து. உத்திராபதி தெற்கு மாவட்டச் செயலராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com