மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 106.78 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,581 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 102 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 701 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.