‘ ஒரத்தநாட்டின் முக்கிய பகுதிகளில்சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்’

ஒரத்தநாட்டின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

ஒரத்தநாடு: ஒரத்தநாட்டின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், அனைத்துப் பதிவேடுகளையும் சரிபாா்த்தாா். காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவையாற்ற வேண்டும் என அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கரோனா காலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட முக்கிய வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் சில வழக்குகள் விரைவில் முடிக்கப்படும்.

ஒரத்தநாட்டின் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனப் பகுதியில் கேமராவை பொருத்த வேண்டும் என்றாா்.

ஆய்வின் போது காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனி, ஆய்வாளா் சுப்பிரமணி, உதவி ஆய்வாளா்கள் முத்துக்குமாா், பிரேசில் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com