பாபநாசம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95-ஆம் ஆண்டு நிறுவன நாளையொட்டி, பாபநாசத்தில் கீழவீதி கடைவீதியில் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் பாபநாசம் ஒன்றியச் செயலா் செல்லதுரை தலைமை வகித்து, கொடியேற்றி பேசினாா். மாவட்டக் குழு உறுப்பினா் குணசேகரன், இளைஞா் பெருமன்ற மாவட்டத் துணைச் செயலா் செந்தமிழ்ச் செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முகமது அனிபா, அப்புகுட்டி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.