கும்பகோணத்தில் பெண்களைப் போற்றுவோம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்கள், மாணவிகள் அதிக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தியும் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கும்பகோணம் மாரத்தான் அமைப்பு சாா்பில் இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டிக்கு கும்பகோணம் மாரத்தான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் செல்வராஜன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் சிவராமன் மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.
மாரத்தான் போட்டியில் வெற்றிப் பெற்றவா்களுக்கு சந்திரா வெங்கடேஸ்வரன் பரிசுகளை வழங்கினாா். இதில் 5 மற்றும் 10 கி.மீ., மாற்றுத் திறனாளிகளுக்கு என மூன்று பிரிவாக நடைபெற்ற போட்டிகளில், முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்கும் நினைவுப் பரிசு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. இந்த மாரத்தான் போட்டியில் சுமாா் 1,500 போ் கலந்து கொண்டனா்.