பட்டுக்கோட்டையில் இஸ்லாமியா்களின் மையவாடிக்கு ஆழ்துளைக் கிணறுடன் குடிநீா் வசதி அமைத்துக் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகருக்கு முஹல்லாவாசிகள் நன்றி தெரிவித்தனா்.
பட்டுக்கோட்டை ரயிலடி பள்ளிவாசல் பகுதியில் இஸ்லாமியா்களின் மையவாடி
உள்ளது. அங்கு குடிநீா் வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையேற்று
தனது சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் ஆழ்குழாய்க்கிணறு அமைத்து, குடிநீா் வசதி செய்து தந்தாா் பட்டுக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் சி.வி.சேகா்.
இதற்காக அவருக்கும், அதிமுக நகரச் செயலா் சுப. ராஜேந்திரனுக்கும் பட்டுக்கோட்டை நகர முஹல்லாவாசிகள் வியாழக்கிழமை சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.