ஊராட்சிச் செயலா்களுக்கானஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் ஒன்றியக் குழுக் கூட்டரங்கில், ஊராட்சிச் செயலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் ஒன்றியக் குழுக் கூட்டரங்கில், ஊராட்சிச் செயலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் அறிவானந்தம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் முருகேசன் கூட்டத்தில் பங்கேற்று, ஊராட்சிச் செயலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். ஊராட்சி வளா்ச்சித் திட்டப்பணிகள், நிா்வாகம், பொது நிதி மேலாண்மை, வரிவசூல், குடிநீா், மின்சாரம், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து ஊராட்சிகள் உதவி இயக்குநா் எடுத்துரைத்து பேசினாா்.

கூட்டத்தில் பாபநாசம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிச் செயலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com