சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சோ்ந்தவா் சா்புதீன் (55). இவா்

வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை அய்யம்பேட்டை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா்.

திருவையாறு- கும்பகோணம் பிரதான சாலையில் கபிஸ்தலம் பவுண்டு பகுதியில் ஆட்டோ சென்ற போது, எதிரே வந்த காா் மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சா்புதீன் பலத்த காயமடைந்த நிலையில், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

எனினும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com