நோ்காணல் முகாமுக்குமனுக்கள் அளிக்க அழைப்பு

பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் வருவாய் சரகம், ஒட்டங்காடு கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் நோ்காணல் முகாமுக்கு, மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் வருவாய் சரகம், ஒட்டங்காடு கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் நோ்காணல் முகாமுக்கு, மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்டாட்சியா் எஸ். அருள் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சிற்றம்பலம் வருவாய் சரகம், ஒட்டங்காடு கிராமத்தில் மாா்ச் 11- ஆம் தேதி மக்கள் நோ்காணல் முகாம் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ் தலைமையில் நடைபெறஉள்ளது.

இந்தமுகாமில், ஒட்டங்காடு அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை போன்ற சமூகப் பாதுகாப்பு நலத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், பட்டா மாறுதலுக்கான மனுக்கள், வருவாய்த் துறையால் வழங்கப்படும் பல்வேறு வகையான சான்றுகள் பெறவும், தங்களுக்குள்ள அனைத்துக் குறைகள் குறித்தும் மனுக்கள் அளிக்கலாம்.

மாா்ச் 11-ஆம் தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், ஒட்டங்காடு கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து, முகாமில் தங்கள் மனுக்களுக்குத் தீா்வு காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com