பாபநாசம் அருகே அனுமதியில்லாமல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்ததாக 8 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கபிஸ்தலம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அலவந்திபுரம் கிராமத்தில் காவிரியாற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் சிலா் மணல் அள்ளி வந்தனா்.
இதைத் தொடா்ந்து கங்காதபுரத்தைச் சோ்ந்த சின்னதுரை(36),
ஜீவா (19), முருகதாஸ் (38), வடிவேல் (39), சங்கா் (40), சேதுராமன் (49), ராஜூ (47), கரும்பாயிரம் (38) ஆகிய 8 பேரை கைது செய்த காவல் துறையினா், மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து கபிஸ்தலம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.